ஓணம் பண்டிகை வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் பெரும்பாலானோர் விமான மூலமாக தங்களின் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அதனால் கேரளா செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் விமான கட்டணங்களும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னை மற்றும் திருவனந்தபுரம் வழக்கமான விமான கட்டணம் 3225 ரூபாயிலிருந்து தற்போது 11 ஆயிரம் முதல் 19,089 வரை உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் கொச்சுக்கு வழக்கமாக இருந்த கட்டணம் 1962 ரூபாயிலிருந்து தற்போது 6500 முதல் 10243 வரை உயர்ந்துள்ளது. அதனைப் போலவே சென்னை மற்றும் கோழிக்கோடுக்கு வழக்கமான நாட்களில் இருந்த 3148 ரூபாய் கட்டணம் தற்போது 7641 முதல் 20,400 வரை உயர்ந்துள்ளது. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.