தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மாணவர்கள் படிக்க ஏதுவாக தேர்வு முடியும் வரை முழு நேர மின்தடை செய்யப்பட மாட்டாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மாணவர்களின் தேர்வை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை மின்தடை தொடர்பாக தமிழ்நாடு மின்சாரியா வாரியத்திற்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் முழு மின்தடை இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.