தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் மாதம்தோறும் 2000 ரூபாய் உதவி தொகையும் அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடும் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தற்போது மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு நான்கு கிராம் தங்கத்தில் தாலி திருக்கோவில் சார்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.