தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் உள்ளதாக இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததாக ஒரு செய்தி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் வெளியான அறிவிப்புகள் தவறான தகவல் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். இது போன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.