தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளதை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று  முதல் 14ம் தேதி வரை www.tngasa.in, tngasa.org என்ற தளங்களில் காலியாக உள்ள பாடப்பிரிவை அறிந்து விண்ணப்பிக்கலாம்.