தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாஜகவினர் பரப்புகின்ற மிகப் பெரிய அவதூறு லவ் ஜிகாத். அதைத்தான் நம்மூர் மருத்துவர் ஐயா நாடக காதல் என மொழி பெயர்த்தார். அப்படியே காப்பி அடித்தார்கள். லவ் ஜிகாத் அதை இவர் தமிழில் நாடக காதல் என்றார். ஆர்.எஸ்.எஸ்காரன் என்ன சொல்றானா..?

முஸ்லிம் இளைஞர்கள்,  இந்து சமூகத்தை சார்ந்த இளம் பெண்களை காதலிப்பது போல் நடித்து… மயக்கி. திருமணம் செய்வதாக நடித்து. அந்த பெண்களை பல்வேறு நிலைகளில் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்… சப்ளை செய்கிறார்கள். இது ஒரு கற்பனைவாத அடிப்படையிலான அவதூறு.

இந்த அவதூறு எல்லாம் எதற்கு பரப்பப்படுகிறது என்றால் ? வெறுப்பை விதைப்பதற்கு…  இதுதான் வெறுப்பு அரசியல். ஓஹோ… நம் பெண்களை… இவர்கள் காதல் என்ற பெயரால் மயக்குகிறார்களா ? இவர்களை விடக்கூடாது.  நாம் தெய்வமாக வணங்குகின்ற பசுவை இவர்கள் அடித்து கறி சமைத்து தின்கிறார்கள்,  இவர்களை வேண்டும் வேண்டும்.

மாட்டு வணிகத்தில் ஈடுபடக் கூடியவர்களை வழிமறித்து,  பசுவை நீ கடத்தி செல்கிறாய் என்று சொல்லி…  கும்பலாக அடித்துக் கொலை செய்கிற இவர்கள் கும்பல் கும்பலாக 10 பேர் 20 பேர் சேர்ந்து மாடு வியாபாரம் செய்யக்கூடிய இஸ்லாமியர்களை குறி வைத்து தாக்குவது… படுகொலை செய்வது…  ஆகவே மூன்று முக்கியமான பிரச்சனைகளை அவர்கள் கையில் எடுத்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.