தமிழகத்தில் 3,6, 9ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக “எஸ்இஏஎஸ் ” எனும் திறனறித் தேர்வு நவ.2ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வை 7.42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் 1,356 பேர் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த  தேர்வானது  3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வருடங்களுக்கு  ஒரு முறைநடைபெறும். இதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறன் கண்டறியப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.