தமிழகத்தில் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக எஸ் இ ஏ எஸ் என்ற திறனறிவு தேர்வு வருகின்ற நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது . இந்த தேர்வை ஏழு புள்ளி 42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்த தேர்வுக்காக 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் 1356 பேர் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.