தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நவம்பர் 29 முதல் டிசம்பர் மாதம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் 10 வாரங்களில் பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்படுவது மருத்துவ வரலாற்றில் இதுதான் முதல் முறை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.