தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக தினம்தோறும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவி நிறுவனம் மூலமாக பால் மட்டுமல்லாமல் பால் சார்ந்த பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் என 225 வரை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 27 ஒன்றியங்கள் மூலமாக இந்த பொருட்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகளை விற்பனை செய்வதற்கு ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் இந்த வருடம் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.