தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கு முன்னதாக நவம்பர் 25ஆம் தேதி போராட்டம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.