தமிழகம் முழுவதும் தற்பொழுது அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு குறித்து அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில் மாநிலத்தில் உள்ள ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் ஒரே வினாத்தாள் வழங்கப்படும் என்றும் இதற்காக இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

டிசம்பர் 11 முதல் 21ம் தேதி வரை 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் 11 , 12ஆம் வகுப்புகளுக்கும் நடைபெ றும். மேலும் அனைத்து பள்ளிகளும் பள்ளிகல்விவித்துறையின் அட்டவணையை பின்பற்றி மட்டுமே தேர்வுகளை நடத்த வேண்டும். அதற்கு முன்னதாக மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள வினாத்தாள்களை பாதுகாப்போடு ஆன்லைன் வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு நாளில் மட்டுமே வினாத்தாள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.