தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழையும் 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர், கோவை, திருவாரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பொளந்து கட்டும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.