மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்.மீனா அறிவித்துள்ளார்.