தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள தலைமை நிதி கட்டுப்பாட்டாளர், நுகர்வோரின் வசதி மற்றும் உரிய வருவாய் ஈட்ட பழுதடைந்த மின் மீட்டர்களை உடனே மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீட்டர்கள் பழுதடைந்துள்ள நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..