தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் ஜூன் முதல் வாரமே வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் ஏழாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாத வண்ணம் உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறி இருப்பது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.