டெல்லியில் மே 28 ஆம் தேதி நடைபெறும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற உள்ளது. தேசிய நலன் கருதி, புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் நான் பங்கேற்க உள்ளேன் என மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, சமரசம் செய்து திறப்பு விழாவுக்கு அழைக்குமாறு பிரதமருக்கு தான் ஆலோசனை கூறுவதாக கூறிய அவர், திறப்பு விழா நிகழ்வைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுப்பதாகவும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிக்கை விடுத்துள்ளார்.