ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து கழகம் தொடர்பான நிகழ்ச்சியில்  பேசிய அவர், ‘1,771 சாதாரண பேருந்துகளை வாங்குவதற்கு ஒப்பந்த புள்ளியை ஜூன் 2லேயே வெளியிட்டுள்ளோம். 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றார்.

மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வழியில் வந்த திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என்றும் கூறினார். புதிய பேருந்துகளை வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.