சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத்திற்காக 2023 ஆம் ஆண்டில் மட்டும் 2,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வழியில் வந்த திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என்றும் கூறினார். புதிய பேருந்துகளை வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று போக்குவரத்து கழகம் தொடர்பான நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.