அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவின் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கிருத்திகாவின் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது. கல்லல் குரூப் பவுண்டேசனில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த கேலோ இந்தியா போட்டியை நடத்த தமிழ்நாட்டிற்கு அனுமதி வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.