தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளும் விமர்சையாக நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை ஏற்றதற்கு பிரதமர் மோடிக்கு மிகவும் நன்றி.

அனைத்து இந்திய மாநிலங்களை சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த தளம் ஆகும். 44 ஆவது செஸ் ஒலிம்பியாட்டின் போது அனைவரும் கண்டது போல கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தமிழ்நாடு மிக விமர்சையாக நடத்தி தமிழ் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் பறைசாற்றும் என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.