தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்களும் தமிழில் இடம்பெற வேண்டும் எனவும் இதனை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர், நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை தமிழில் வைக்கும்படி வணிகர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். அரசு அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆங்கில பெயர்களில் உள்ள பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.