தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும் நிலையில் ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்றோடு மொத்தமாக கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் மூன்றாம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியும் நிறைவடைந்த நிலையில் அதனைத் தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களின் இறுதி தேர்வுகளையும் 28ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றோடு அனைவருக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது.