தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று  நடைபெறும் முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.