அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் நாளை மறுநாள் நவ.27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி ஓட்டுனர், நடத்துனருக்கான தேர்வுகள் நடந்தது, இந்தநிலையில், இத்தேர்வுக்கான மதிப்பெண், ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை Www.arasubus.tn.gov.in-ல் நவ.27ம் தேதி காலை 9.30 மணியளவில் வெளியாகும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சுமார் 9,352 பேர் இப்பணிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்றிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.