தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புக்கு விடுப்பு எடுக்காமல் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.