ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் துணிக்கடை மற்றும் நகை கடைகள் சார்பாக தள்ளுபடி வழங்குவதாக வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் வரும் போலி லிங்குகளை கிளிக் செய்து யாரும் ஏமாற வேண்டாம் என்று ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற லிங்க்குகளை தேர்வு செய்து உள்ளே சென்றால் அதன் மூலம் பணம் மோசடி நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில் இது போன்ற லிங்க்குகள் வந்தால் அதனை உள்ளே சென்று பார்ப்பதை விடுத்து உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.