தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் சிஸ்டம் தொடங்க உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெறும். கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பு உயிரிழப்புகளை தடுக்க நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.