தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் எனவும் எதிர் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.