தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு பொது விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தவிர வார இறுதி நாட்கள்,உள்ளூர் விடுமுறை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலும் நடப்பு ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களுக்கான பட்டியலை அரசு முன்னரே வெளியீட்டு வருகிறது.

இந்நிலையில் மே 1ஆம் தேதியான இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவதால் உழைப்பாளர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக இன்றைய தினம் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பொது விடுமுறையானது 1881 ஆம் ஆண்டின் பேச்சு வார்த்தை கூறிய சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அரசு மற்றும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.