மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில்டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

நாளை மே தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகிறார்கள். உழைப்பாளர் தினம் என்பதால் நாளை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள், அரசு அலுவலகங்கள் நாளை செயல்படாது. அதோடு டாஸ்மாக் கடைகளும் மொத்தமாக மூடப்படுகின்றன. இன்று  மது விற்றாலோ, வாங்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.