16வது ஐபிஎல் தொடரில் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இந்த போட்டியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பார்த்து வருகிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.