தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள கரூர், தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், இப்போது கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில்….. மக்களே உஷாரா இருங்க…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more