தமிழகத்தில் அண்ணா பல்கலை. கீழ் 460க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை ஏஐசிடிஇ, அண்ணா பல்கலையில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பின்னரே, மாணவர் சேர்க்கை மேற்கொள்ள முடியும்.  அதன்படி 2023-24ம் கல்வியாண்டுக்கான அங்கீகாரத்தை பொறியியல் கல்லூரிகள் புதுப்பிக்கும் பணிகள் ஆனது கடந்த ஜனவரியில் தொடங்கியது.

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 23ஆம் தேதியோடு முடிவடைந்தது. அதேபோல அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரத்துக்கான விண்ணப்ப பதிவு 24ம் தேதியொடு முடிவடைந்த நிலையில்நடப்பாண்டில் 6 கல்லூரிகள் இதற்கான அங்கீகாரம் கோரி விண்ணப்பம் செய்யவில்லை. இதனால், இந்த கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது.