கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல சாதனைகளை செய்துள்ளோம். இதை ஜீரணிக்க முடியாததால் போலியான ஆடியோக்களை வெளியிட்டுள்ளனர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரைப் பற்றி நான் எப்படி தவறாக பேசுவேன் என்று கூறினார். மேலும், எங்களை பிரிக்க துடிக்கும் பிளாக்மெயில் கும்பலின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது என்று PTR விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் சர்ச்சை ஆடியோவை அமைச்சர் பிடிஆர் மறுக்கவில்லை’ என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர், ‘எது எதற்கோ முதல்வர் பேட்டி கொடுக்கிறார். அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், இந்த விசயத்திற்கு இதுவரை மறுப்பே தெரிவிக்கவில்லை. ஆடியோவில் பேசிய அமைச்சர் பிடிஆர், அந்த ஆடியோவில் தான் பேசியதுபோல வெட்டி ஒட்டப்பட்டதாக தான் கூறுகிறார். அப்படியென்றால், அவர் பேசியது உண்மை என்றாகிவிட்டது’ என்று விமர்சித்துள்ளார்.