தமிழகத்தில் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெறுகின்றது. இந்த தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மொத்தம் 5,446பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலை தேர்வு கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது பிரதான தேர்வு பிப்ரவரி 25ஆம் தேதி அதாவது இன்று நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாய தமிழ் மொழி தகுதித்தாலும் பிறகு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுஅறிவு மற்றும் பாடங்கள் தொடர்பான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 280 தேர்வு கூடங்களின் தேர்வுகள் நடைபெறும்.