கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று தமிழகத்தில்  நடைபெற உள்ளது.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று  நடைபெறும் குரூப்-2 தேர்வில் பங்கேற்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என TNPSC-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.