TNPSC Group 2, 2A முதன்மை தேர்வு இன்று நடைபெறவுள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9.30-க்கு தொடங்கும் தேர்வுக்கு 8.30க்குள், மதியம் 2-க்கு தொடங்கும் தேர்வுக்கு 1 மணிக்குள் தேர்வர்கள் தேர்வறைக்குள் இருக்க வேண்டும்.

ஹால் டிக்கெட் உடன் ஆதார், லைசன்ஸ் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருக்க வேண்டும். கருப்பு மை அடங்கிய பேனாவில் மட்டுமே தேர்வெழுத வேண்டும். பதிவெண்ணை தவறாக எழுதினால், 2 மதிப்பெண்கள் பிடித்துக் கொள்ளப்படும்.