தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் வானவில் மன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 210 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் போது அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.