தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்தி முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. இதற்காக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றது போல 14.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் தனித் திறன்களை அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக வெளிப்படுத்த ஏதுவாக அரங்கம் அமைத்து சிறந்த ஒளி மற்றும் ஒலி அமைப்பை ஏற்படுத்தி ஆண்டு விழாவை கொண்டாட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.