தாம்பரம் நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவையானது  மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், ரயில் எண் 06012 நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயில் நாகர்கோவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 4:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மறு மார்க்கத்தில் தாமரத்திலிருந்து காலை 8.5 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் சிறப்பு ரயில் வண்டியில் 0601 திங்கள்கிழமை பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 தேதிகளில் இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். டிக்கெட் முன்பதிவு ஆனது ஜனவரி 30 ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது.