தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தீபாவளிக்கு பிறகு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.