மக்களவை தேர்தலின் போது திமுகவினர் ஊருக்குள் போக முடியாத நிலை உருவாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் மக்களின் அதிருப்தியை திமுக அரசு பெற்றுள்ளது. நாடாமன்ற தேர்தலின் போது திமுகவினர் வாக்கு கேட்டு ஊருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும். சட்டமன்ற தேர்தலின் போது அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற தவறி விட்டது என்றார்.