நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது இருந்தே பட்டாசு விற்பனை களைகட்டி உள்ளது. இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை வாங்கி பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் விளைவு குறைவு என்பதால் பொதுமக்கள் பலரும் அதிக புகை மண்டலங்களை ஏற்படுத்தும் சீன பட்டாசுகளை பயன்படுத்துகிறார்கள்.

இதனால் தமிழகத்தில் தீபாவளி பண்டிகை என்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் காலை ஆறு மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் தீக்காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக முதலுதவி மேற்கொண்டு மருத்துவமனையை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.