தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் சீரான மின்விநியோகம் அளிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தினம்தோறும் ஒவ்வொரு பகுதியாக இந்த பணிகள் நடைபெறுவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட நேரம் மின்விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நாளை அக்டோபர் 1 வாராந்திர விடுமுறை மற்றும் திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 ஆகிய இரண்டு நாட்களிலும் விடுமுறை நாட்கள் என்பதால் மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறாது. இதனால் மின்விநியோகமானது தடை செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.