108 ஆம்புலன்சில் உதவியாளர் பணியானது திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக இருப்பதாக  சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த நிலையில் இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்ய பாளையங்கோட்டை கே டி சி நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி காலை 9 மணிக்கு நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த பணியில் சேர பிஎஸ்சி நர்சிங், டிஎம்எல்டி, டிஎன்ஏ படிப்பு, 12ம் வகுப்பிற்கு பின் இரண்டு வருடங்கள் படித்திருக்க வேண்டும்.

மேலும் இதில் சேர 19 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 15 ஆயிரத்து 435 சம்பளம் வழங்கப்படும். மனிதவளத் துறையின் நேர்முகமாக எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியியல், முதலுதவி அடிப்படையில் செவிலியர் பணி குறித்து தேர்வு நடைபெறும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-28888060, 75, 77 ஆகிய தொலைபேசி எண்களில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களை 108 சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ளார்.