தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வெளியான அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11-ல் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும்  அக்டோபர் 30ஆம் தேதியன்று கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.