தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் வெப்ப அலை வீசப்படும் என்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 42 டிகிரி செல்சியஸ்-ஐ ஒட்டி இருக்க கூடும் என்றும், மே நான்கு மற்றும் ஐந்து ஆகிய தேதிகளில் வெப்பநிலை குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.