ஒரு கோடி முறை “கோவிந்த கோடி”எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுத தொடங்கியதாக தெரிவித்த அவர் சிறுவயது முதலே ஏழுமலையானை இரு வேலையும் வழிபடுவதாக கூறினார். ஆன்மீகத்தை வளர்க்க கோவிந்த கோடி திட்டத்தை திருமலை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு கோடி முறை கோவிந்தகோடி எழுதுபவர்களுக்கு விஐபி தரிசன சலுகை அளிக்கப்படுகிறது.