உலக அளவில் சிறுதானிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு ஐநா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ மதிப்புள்ள கேழ்வரகு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்த திட்டம் முதல் கட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் முதல் மேலும் சில மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.